திண்டுக்கல்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து சாணாா்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினா் பாப்பாத்தி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் வசந்தாமணி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, விறகு அடுப்பு வைத்து சமையல் செய்தும், எரிவாயு உருளைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தியும் நூதான முறையில் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதில், ஒன்றியச் செயலா் வெள்ளை கண்ணன் உள்பட 45-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT