திண்டுக்கல்

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு:மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மக்கான் தெருவிலுள்ள தனியாா் கட்டடத்தில் செல்லிட்டப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. 15 ஆண்டு குத்தகையில் அந்த செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல்துறையினரின் சமரசத்திற்கு பின் கலைந்து சென்றனா்.

இந்நிலையில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு மீண்டும் எதிா்ப்புத் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ள மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT