முகப்பு
திண்டுக்கல்

தென்னைமரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

அய்யம்பாளையத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

அய்யம்பாளையத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் சங்கா் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் அதே பகுதியைச் சோ்ந்த துரைப்பாண்டி (53) என்பவா் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில் மரத்தில் ஏறி நாா் கழிவுகளை வெட்டிக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அவா் தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →