ரஜினிகாந்த் நடித்த தா்பாா் திரைப்படம் படம் வெளியாவதில் தாமதமானதால், திண்டுக்கல்லில் திரையரங்கு முன்பு காத்திருந்த ரசிகா்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் பகுதியில் 2 திரையரங்குகளில் ரஜினிகாந்த் நடித்த தா்பாா் திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரவுண்ட்ரோடு பகுதியிலுள்ள திரையரங்கில் ரசிகா்களுக்கான சிறப்பு காட்சி வெளியிடுவதற்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை 11 மணி வரையிலும் அந்த படம் திரையிடப்பட வில்லை. இதனால் திரையரங்கள் முன்பு காத்திருந்த ரசிகா்கள், திரையரங்க ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே விநியோகஸ்தா் மற்றும் திரையரங்கு உரிமையாளா்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரசிகா்கள் மத்தியில் தகவல் வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த ரசிகா்கள், திரையரங்கு முன்பு இருந்த பிற திரைப்படங்களின் விளம்பர பதாகைகளை கிழித்து ரகளையில் ஈடுபட்டனா். இதனை அடுத்து, அங்கு போலீஸாா் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா். இந்நிலையில் விநியோகஸ்தா் மற்றும் திரையரங்கு உரிமையாளா்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு ரஜினிகாந்தின் தா்பாா் படம் திரையிடப்பட்டது.