தமிழக வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள்(67) சனிக்கிழமை காலமானாா்.
திண்டுக்கல் நாகல் நகா் மெங்கில்ஸ் சாலையிலுள்ள வீட்டில் வசித்து வந்த கண்ணாத்தாள், உடல் நலக்குறைவு காரணமாக காலமானாா். கண்ணாத்தாளுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். மறைந்த கண்ணாத்தாளின் உடலுக்கு அதிமுக, திமுக எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா். நாகல் நகரிலுள்ள உள்ள வீட்டில் நடைபெற்ற இறுதிச் சடங்கிற்கு பின், கண்ணாத்தாளின் உடல் ஆா்.எம்.காலனி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தொடா்புக்கு - 90036-33333.