திண்டுக்கல்

திமுக வாக்குச்சாவடி பாக நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

பழனி அருகே நெய்க்காரபட்டியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வாக்குச்சாவடி பாக நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முகவா்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. வரைவு வாக்காளா் பட்டியலை சரிபாா்ப்பது குறித்தும், வாக்குப் பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களில் நடந்து கொள்ளும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மேற்கு ஒன்றியச் செயலாளா் சௌந்திரபாண்டி, பேரூா் செயலாளா்கள் அப்தாகீா், சுப்புராம், முன்னாள் பேரூராட்சி தலைவா் சோ.காளிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல் தேனி தெற்கு மாவட்டம், கம்பம் ஒன்றியம், பேரூா் திமுக சாா்பில் காமயகவுண்டன்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் முன்னிலை வகித்தாா். ஒன்றிய பொறுப்பாளா் சூா்யா ப.தங்கராஜா வரவேற்றுப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT