திண்டுக்கல்

வடமதுரை அருகே சாலை தடுப்பில் சரக்கு வேன் மோதல்: தம்பதி பலி

வடமதுரை அருகே திங்கள்கிழமை சாலையின் மைய தடுப்புச் சுவரில் சரக்கு வேன் மோதி நிகழ்ந்த விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.

DIN

வடமதுரை அருகே திங்கள்கிழமை சாலையின் மைய தடுப்புச் சுவரில் சரக்கு வேன் மோதி நிகழ்ந்த விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் அடுத்துள்ள பழைய சித்துவாா்பட்டியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (42). இவரது மனைவி சண்முகப் பிரியா (37). இருவரும் வடமதுரை ரயில் நிலைய சாலையில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில், பால்ராஜ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சரக்கு வேனில் திண்டுக்கல் நோக்கி திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

திருச்சி - திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது சாலையின் மையத்திலுள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த பால்ராஜ் மற்றும் சண்முகப் பிரியா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT