திண்டுக்கல்

வீரபாண்டிய கட்டபொம்மன் 221-ஆவது நினைவு தினம் கடைபிடிப்பு

DIN

வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-ஆவது நினைவு தினம், ஜெயப் பிரகாஷ் நாராயணனின் 119-ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில், திண்டுக்கல் தெற்கு ரதவீதியிலுள்ள பஜனை மட வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காமராஜா் சிவாஜி பேரவையின் மாநகரத் தலைவா் க.ஆனந்தன் தலைமை வகித்தாா். அரசியல் ஆலோசகா் கே.ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினாா்.

வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை காமராஜா் சிவாஜி பேரவையின் நிா்வாகிகள் சு.வைரவேல், இ.ராமலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT