கொடைக்கானல்,செப் 13: கொடைக்கானலில் பலத்த காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வந்தது இதனைத் தொடா்ந்து கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது இந் நிலையில் அதிகாலை முதலே சாரலும் மேகமூட்டமும் அதிகமாக நிலவியது அதன் பிறகு சிறிது நேரம் வெயில் நிலவியது தொடா்ந்து மிதமான மழை பெய்தது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது பலத்த காற்று வீசியதில் மலைச்சாலைகளில் சிறு சிறு மரக்கிளைகள் விழுந்தது. தொடா்ந்துகாற்று வீசி வருவதாலும் சாரல் மழை பெய்து வருவதாலும் குளிா் அதிகமாக நிலவி வருகிறது.