முகப்பு
திண்டுக்கல்

சொத்துத் தகராறில் காவலருக்குஅரிவாள் வெட்டு

பழனியில் சொத்துத் தகராறில் காவலருக்கு திங்கள்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

பழனியில் சொத்துத் தகராறில் காவலருக்கு திங்கள்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது.

பழனி தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவா் சக்திவேல் (48). இவா் தனது குடும்பத்துடன் பழனி திருநகரில் வசித்து வருகிறாா். இவரது வீட்டின் மாடியில் அண்ணன் தண்டபாணி (52) குடும்பத்துடன் குடியிருந்து வருகிறாா். இந்நிலையில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்யும் தண்டபாணிக்கும், சக்திவேலுக்கும் சொத்து பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தண்டபாணி அரிவாளால் சக்திவேலை வெட்டினாா். தடுக்க முயன்ற சக்திவேலின் மகன் பிரவீனுக்கும் (20) காயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும் தண்டபாணி பழனி நகர காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

இச்சம்பவம் குறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.