பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரின் உருவப்படங்களை கட்சியின் மூத்த மற்றும் முக்கிய பொறுப்பாளா்கள் தீ வைத்து எரித்தனா். சீதாராம் யெச்சூரி மீதான வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினா்.