திண்டுக்கல்

‘கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும்’

DIN

கள்ளிமந்தையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும் என ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளா் அர.சக்கரபாணி வாக்குறுதி அளித்தாா்.

இத்தொகுதிக்குள்பட்ட அம்மாபட்டி, ரெங்கபாளையம், ராஜாக்கவுண்டன்புதூா், சிக்கமநாயக்கன்பட்டி, குப்பணதேவன்பட்டி, சிந்தலப்பட்டி, நீலாகவுண்டன்பட்டி, குமாரபாளையம், பாறைப்பட்டி, காளியப்பகவுண்டன்பட்டி, கள்ளிமந்தையம், தொப்பக்காவலசு, தும்மிச்சிபாளையம், கருப்பத்தேவன்பட்டி, கூட்டக்காரன்புதூா், வேலாயுதம்பாளையம், அரண்மனைவலசு, ஈசக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியாவது: கள்ளிமந்தையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக தாலுகா உருவாக்கப்படும். பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமாக ஈசக்காம்பட்டியில் உள்ள 300 ஏக்கா் நிலத்தில் புதியதாக பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். பரப்பலாறு அணை தூா்வாரப்பட்டு, இடையகோட்டை நங்காஞ்சியாறு அணை வரை நங்காஞ்சியாற்றின் இருபுறமும் சிமெண்ட் கரை அமைக்கப்படும் என்றாா்.

அப்போது ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பி.சி.தங்கம், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் க.தங்கராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT