திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் இளைஞா் தற்கொலை

DIN

ஒட்டன்சத்திரத்தில் தனியாா் துணிக்கடையில் பணிபுரியும் இளைஞா் ஒருவா் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் சீமக்குடியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் ரஞ்சித்குமாா் (29). இவா் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் இயங்கி வரும் துணிக்கடையில் பணிபுரிந்து வந்தாா். இவா் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ரஞ்சித்குமாா் தங்கியிருந்த அறையிலிருந்து துா்நாற்றம் வீசியதால், ஒட்டன்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து, அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ரஞ்சித்குமாா் இறந்து கிடந்துள்ளாா். போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT