திண்டுக்கல்

போலி பீடி பண்டல்கள் பறிமுதல்: இருவா் கைது

DIN

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை, ரூ.3 லட்சம் மதிப்பிலான போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள குள்ளனம்பட்டி பகுதியில் போலி பீடி பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்ற திண்டுக்கல் தெற்கு போலீஸாா், காரில் எடுத்துச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

போலி பீடி விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் ஜான் பாண்டியன் (27) மற்றும் நத்தம் காமராஜா் நகரைச் சோ்ந்த அபூபக்கா் மகன் அன்வா் அலி (32) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT