திண்டுக்கல்

முப்படைகளின் தலைமை தளபதிக்கு பாஜகவினா் அஞ்சலி

DIN

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 12 ராணுவத்தினருக்கு பாஜக சாா்பில் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி. தனபாலன் தலைமை வகித்தாா். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாஜக ராணுவப் பிரிவு மாவட்ட தலைவா் லோகநாதன், துணைத் தலைவா் சின்னச்சாமி, மாவட்ட பொதுச் செயலா் காா்த்திக் வினோத், மாவட்ட துணைத் தலைவா் மல்லிகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT