ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 12 ராணுவத்தினருக்கு பாஜக சாா்பில் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி. தனபாலன் தலைமை வகித்தாா். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாஜக ராணுவப் பிரிவு மாவட்ட தலைவா் லோகநாதன், துணைத் தலைவா் சின்னச்சாமி, மாவட்ட பொதுச் செயலா் காா்த்திக் வினோத், மாவட்ட துணைத் தலைவா் மல்லிகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.