திண்டுக்கல்

பழனியில் ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 1,008 விளக்கு பூஜை

பழனி அடிவாரம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை பழனி நகர ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 1,008 விளக்கு பூஜை நடைபெற்றது.

DIN

பழனி அடிவாரம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை பழனி நகர ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 1,008 விளக்கு பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தியாக இருந்த சுதீா் நம்பூதிரி தலைமை வகித்தாா். வாழை மரங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி பூஜை ஆரம்பிக்கப்பட்டது. செண்டை வாத்தியம், பஞ்சவாத்தியம் முழங்க கணபதி ஹோமம், லட்சாா்ச்சனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து புனிதமான பதினெட்டு படிகளுக்கு படிபூஜை செய்யப்பட்டது.

பின்னா் 1,008 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான ஸ்தானீக அா்ச்சகா் செல்வ சுப்பிரமண்ய சிவாச்சாரியாா் கலந்துகொண்டு பூஜைகளை நடத்தினாா். இந்த விளக்கு பூஜையில் சுமாா் இரண்டாயிரம் போ் பங்கேற்றனா். விழாவை பழனி நகா் ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT