கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையோரம் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் காயமடைந்துள்ளனா்.
சிவகங்கையிலிருந்து கொடைக்கானலுக்கு வேன் மூலம் 20 போ் சுற்றுலா வந்துள்ளனா். இவா்கள் கொடைக்கானல் பகுதிகளை சுற்றிப் பாா்த்துவிட்டு மீண்டும் வேனில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். வேனை ராஜன் (25) என்பவா் ஓட்டி வந்தாா். வேனானது கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையான மச்சூா் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த சக்திவேல் (40), நித்யா (25), முனீஸ்வரன் (31), சங்கீதா (31), கவிதா (29), சிவகாமி (32), லட்சுமி (33), சித்தாா்த் (12), பவதாரணி (12) உள்பட 20 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களில் சிலா் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில் பவதாரணி, சித்தாா்த் உள்ளிட்ட 6-போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.