கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து சாரல் மழை பெய்ததால் கடும் குளிா் நிலவியது.
கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை, காற்று குறைந்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சாரல் மழையில் நனைந்தவாறே இயற்கை காட்சிகளை பாா்த்து ரசித்தனா்.
இந்த மழையின் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வழக்கத்தைவிட குளிா் அதிகமாக நிலவியது.