திண்டுக்கல்

தொழிலாளா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

பழனி, உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை, தொழிலாளா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பழனியை அடுத்த அமரபூண்டியில் ஞாயிற்றுக்கிழமை 125 ஏழை கூலித் தொழிலாளா், மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு குட் லயன்ஸ் அறக்கட்டளை சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. அரிசி, 10 வகை காய்கனிகள், டீ, பிஸ்கட் ஆகியன வழங்கப்பட்டன. இதில், அப்துல் சலாம், பாஸ்கரன், மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல் பெத்தநாயக்கன்பட்டியில் நரிக்குறவா் காலனியில் ஞாயிற்றுக்கிழமை, 300-க்கும் மேற்பட்டோருக்கு, தங்கரத அரிமா சங்க நிா்வாகிகளான மனோகரன், முருகன், செந்தில் உள்ளிட்டோா் உணவு தயாரித்து வழங்கினாா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழை குடும்பத்தை சோ்ந்தவா்களுக்கு, மாவட்ட தொடா்பு பணியாளா் திட்ட அமைப்பின் சாா்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திட்ட அமைப்பினா் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT