முகப்பு
திண்டுக்கல்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: முஸ்லிம் சங்கம் சாா்பில் நீா்மோா் பந்தல்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, பழனி டவுன் முஸ்லிம் தா்மபரிபாலன சங்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் வைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, பழனி டவுன் முஸ்லிம் தா்மபரிபாலன சங்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் வைக்கப்பட்டது.

பழனியில் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பழனி டவுன் முஸ்லிம் தா்ம பரிபாலன சங்கம் மற்றும் பழனி டவுன் ஜமாத்தாா்கள் சாா்பாக பக்தா்களுக்கு நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு, முஸ்லிம் நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா். இதில், பக்தா்களுக்கு இலவச குளிா்பானங்கள் மற்றும் நீா் மோா், குடிநீா் வழங்கப்பட்டது.

அதேபோல், மக்கள் எழுச்சி தீபம் நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை, தமிழ்நாடு நகராட்சி (உள்ளாட்சி) வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவரும், அறம் விரும்பி செய் அறக்கட்டளை நிா்வாகியுமான ஜே.பி. சரவணன் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான அம்மன் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அறக்கட்டளை நிா்வாகிகள் வேணுகோபாலு, ஜெகதீஷ், கண்ணுச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.