திண்டுக்கல்

பழனி மகளிா் கல்லூரி முதல்வருக்கு விருது

DIN

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரி முதல்வருக்கு மகளிா் தினத்தை முன்னிட்டு ‘இவள் தாரகை’ விருது வழங்கப்பட்டது.

பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில் உள்ள இக்கல்லூரி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கல்லூரி முதல்வராக முனைவா் ந.புவனேஸ்வரி பணியாற்றி வருகிறாா்.

இவரது கல்விச் சேவையைப் பாராட்டி சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் திண்டுக்கல் கிளையும், இவள் தாரகை இலக்கிய இதழும் இணைந்து இவள் தாரகை என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளன.

இவ்விருது 30 வருட கல்விச்சேவை, இளம்பெண் விஞ்ஞானி பட்டம் மற்றும் சிங்கப்பூரில் ஒருவருட கால ஆராய்ச்சி போன்ற கல்விச் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற முதல்வா் முனைவா் புவனேஸ்வரியை கல்லூரிச் செயலா் மற்றும் பழனி கோயில் துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT