திண்டுக்கல்

பழனியில் அமமுக செயல்வீரா்கள் கூட்டம்

DIN

பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளா் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் நல்லசாமி தலைமை வகித்தாா். வேட்பாளா் வீரக்குமாா் முன்னிலை வகித்தாா். அப்போது வேட்பாளா் வீரக்குமாா் பேசியது: பழனி நகருக்கு சுற்றிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், கொடைக்கானல்- மூணாறு சாலையை மீண்டும் புனரமைக்கவும், பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு புதிய சாலை அமைக்கவும், காவலப்பட்டியில் பச்சையாறு அணையை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். முன்னதாக தேமுதிக மாவட்டச் செயலாளா் எஸ்ஆா்கே பாலு, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் கைசா் உள்ளிட்டோா் சிறப்புரை நிகழ்த்தினா். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT