திண்டுக்கல்

பால் கேனில் ‘கள்’ விற்றவா் கைது

DIN

திண்டுக்கல் அருகே பால் கோனில் வைத்து, கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்பு கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் க.சின்னு (56). இவா் கரட்டுப்பட்டி பிரிவு அருகே பால் கேனில் வைத்து, பனங் கள் விற்பனை செய்துள்ளாா்.

இந்நிலையில் அந்த வழியாக ரோந்து சென்ற தாடிக்கொம்பு சாா்பு- ஆய்வாளா் முத்தமிழ்செல்வி, சின்னுவிடம் விசாரித்தபோது, பால்காரா் போல் நடித்து ‘கள்’ விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சின்னுவை, போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 20 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT