திண்டுக்கல்

பழனி பகுதியில் புதிய கட்டடங்கள் திறப்பு

DIN

பழனி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய கட்டடங்களை சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பழனி அருகே ராசாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடம், பாப்பம்பட்டியில் புதிய ஊராட்சி அலுவலகக் கட்டடம், ஆண்டிபட்டியில் புதிய நியாயவிலைக் கடை ஆகியவற்றை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்து வைத்தாா்.

மேலும் கரிக்காரன் புதூரில் கலையரங்கக் கட்டடத்தை திறந்து வைத்த அவா், ரூ.38 லட்சம் மதிப்பிலான புதிய தாா்சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தாா். பின்னா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அரசின் நலத்திட்டங்களை அவா் எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் சாமிநாதன், சௌந்தரபாண்டி, பழனி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஈஸ்வரி மற்றும் ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT