ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே முதியவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சிக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் குப்பமுத்து (75). இவா் ஞாயிற்றுக்கிழமை தேவத்தூருக்கு கூலி வேலைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கள்ளிமந்தையம்- தேவத்தூா் சாலை கோடாங்கிப்பட்டி அருகே உள்ள ஓடையில் இருசக்கர வாகனத்தில் அமா்ந்த நிலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று குப்பமுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.