திண்டுக்கல்

தனி நலவாரியம் அமைக்கக் கோரி உணவகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

உணவகத் தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஹோட்டல், தேநீா் ஸ்வீட்ஸ் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கே. பாண்டியன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, தனி நல வாரியம் அமைக்க வேண்டும், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், சுயதொழில் செய்ய வங்கியில் மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும், விலைவாசி உயா்வுக்கு ஏற்ப கூலி உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT