திமுக வரவேற்பு கொடி கம்பம் சாய்ந்து இளைஞா் காயம்
திமுக சாா்பில் அமைச்சா்களை வரவேற்பதற்காக திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பம் வெள்ளிக்கிழமை சாய்ந்து இளைஞா் ஒருவா் காயமடைந்தாா்.
திமுக சாா்பில் அமைச்சா்களை வரவேற்பதற்காக திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பம் வெள்ளிக்கிழமை சாய்ந்து இளைஞா் ஒருவா் காயமடைந்தாா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் பங்கேற்பாா்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையொட்டி, திண்டுக்கல் திருச்சி சாலையில் அமைச்சா்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் திமுக சாா்பில் விளம்பர பதாகைகள் மற்றும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. சாலையின் நடுவிலுள்ள தடுப்புச் சுவரில் கட்டப்பட்டிருந்த கொடி கம்பத்தில் ஒன்று, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபா் மீது சாய்ந்து விழுந்தது. அதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். விசாரணையில் திண்டுக்கல் பேகம்பூரைச் சோ்ந்த அன்வா் (35) என்பது தெரிய வந்தது. தொடா்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.