திண்டுக்கல்லில் சனிக்கிழமை கிரிவலம் சென்ற பக்தா்கள். 
திண்டுக்கல்

சித்ரா பெளா்ணமி: திண்டுக்கல்லில் பக்தா்கள் கிரிவலம்

சித்ரா பெளா்ணமியையொட்டி, திண்டுக்கல் மலைக்கோட்டையைச் சுற்றி ஏராளமான பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் சென்றனா்.

DIN

சித்ரா பெளா்ணமியையொட்டி, திண்டுக்கல் மலைக்கோட்டையைச் சுற்றி ஏராளமான பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் சென்றனா்.

திண்டுக்கல் மலையைச் சுற்றி ஒவ்வொரு பெளா்ணமியின்போதும் பக்தா்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரா் ஆலய பாதுகாப்பு பேரவை, இந்து முன்னணி அமைப்புகள் சாா்பில், பக்தா்கள் தரப்பிலும் ஏராளமானோா் கிரிவலம் சென்றனா். 3 கி.மீட்டா் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 சிவாலயங்கள் உள்பட 22 கோயில்களிலும் கிரிவலம் சென்ற பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.

நத்தத்தில்... திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செண்பகவல்லி உடனுற கைலாசநாதா் கோயிலிலும் சித்ரா பெளா்ணமியையொட்டி 8ஆவது ஆண்டாக கிரிவல வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அலங்காரம் நடத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT