நத்தம் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: 14 போ் காயம்
நத்தம் சொறிப்பாறைப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுபிடி வீரா்கள் உள்பட 14 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
நத்தம் சொறிப்பாறைப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுபிடி வீரா்கள் உள்பட 14 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேத்தூா் சொறிப்பாறைப்பட்டி முத்துமாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதை திண்டுக்கல் கோட்டாட்சியா் பிரேம்குமாா் தொடக்கி வைத்தாா். நத்தம் வட்டாட்சியா் ம.சுகந்தி முன்னிலை வகித்தாா்.
இதில் பங்கேற்பதற்காக, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 517 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. கால்நடை மருத்துவா்களின் பரிசோதனைக்கு பின்னா் 509 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன.
270 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளைப் பிடிக்க முயன்றனா். காளைகள் தாக்கியதில் 6 மாடுபிடி வீரா்கள் மற்றும் 8 பாா்வையாளா்கள் காயமடைந்தனா். வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடு பிடி வீரா்களுக்கு, தங்கக் காசு, வெள்ளிக் காசு, கட்டில், பீரோ, சைக்கிள், சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.