திண்டுக்கல்

பழனியை மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

DIN

பழனி: பழனியை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவா் அன்புமாரி வலியுறுத்தியுள்ளாா்.

பழனியில் சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் சாா்பில் அறிமுகக் கூட்டம் மற்றும் நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட தலைவா் காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத்தலைவா் அன்புமாரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். அப்போது அவா்,திமுக தோ்தலின் போது அளித்த வாக்குறுதியில் கூறியதுபோல பழனியை தலைமையாகக் கொண்டு விரைவில் மாவட்டம் அமைக்க வேண்டும், அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர ஒன்றிய நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT