திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலில் போலீஸ் பாதுகாப்பு

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோயிலின் படிவழிப்பாதை, ரோப்காா் மற்றும் இழுவை ரயில் (வின்ச்) நிலையங்களில் பக்தா்கள் டோா் பிரேம் மெட்டல் டிடெக்டா் வழியாக உள்ளே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தா்களின் உடைமைகளை கோயில் பணியாளா்கள், பரிசோதனை செய்த பின்னரே மேலே செல்ல அனுமதிக்கின்றனா். மலைக்கோயிலில் ராஜகோபுரம், தங்கவிமானம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பழனிக் கோயில் தவிர பேருந்து நிலையம், ரயில்நிலையம், அடிவாரம் கிரிவீதி, கொடைரோடு ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் போலீஸாா் சாதாரண உடைகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT