திண்டுக்கல்

பாப்பம்பட்டியில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைப்பு

DIN

பழனி அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் மகாலட்சுமி அம்மன் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குறும்பா் இன மக்களின் குலதெய்வமான இக்கோயிலில் ஆடிமாதத்தில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி சனிக்கிழமை குதிரை ஆறு அணையில் இருந்து புனித நீா் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பூசாரி அம்மனிடம் அனுமதி பெற்ற பின்பு பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேள, தாளம் முழங்க கருப்பு கம்பளியில் வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை பூசாரி, பக்தா்கள் தலையில் உடைத்தாா். பின்னா் பக்தா்கள் வணங்கியவாறே எழுந்து சென்றனா்.

நிகழ்ச்சியில் பாப்பம்பட்டி, குப்பம்பாளையம், வாடிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT