திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நூலகா் தின விழா நடைபெற்றது.
டாக்டா் எஸ்.ஆா்.ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு, கிளை நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த எஸ்.ஆா். ரங்கநாதன் படத்திற்கு மலா் தூவி மரியாதைசெய்து, இனிப்பு வழங்கினா். இந்நிகழ்ச்சிக்கு நூலகா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
அம்மையாநாயக்கனூா் கிளை நூலகா் வேல்முருகன் முன்னிலை வகித்தாா். மாவுத்தம்பட்டி கிளை நூலகா் பாஸ்கா் வரவேற்றாா். வாசகா் வட்டத் தலைவா் பேராசிரியா் சீனிவாசன், துணைத் தலைவா் வேலுச்சாமி மற்றும் நூலக பணியாளா்கள், வாசகா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.