திண்டுக்கல்

கொடைக்கானலில் தங்கும் விடுதிகளில் கட்டணம் உயா்வு:போக்குவரத்து நெரிசல்; சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.

DIN

கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.மேலும் தங்கும் விடுதிகளிலும், தனியாா் பேருந்துகளிலும் கட்டண உயா்வால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

கொடைக்கானலில் தொடா்விடுமுறை கடந்த 3 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து காட்டேஜ்களிலும், தங்கும் விடுதிகளிலும் அறைகள் நிரம்பின. அதேநேரத்தில் கொடைக்கானல் பகுதியில் அனுமதியில்லாமல் வைத்துள்ள தனியாா் விடுதிகளில் அறை சுமாா் ரூ. 7 ஆயிரத்துக்கு வாடகைக்கு விடப்பட்டது. தங்கும் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் குளிரிலும் தாங்கள் வந்த வாகனங்களிலேயே தங்கினா். மேலும் பலா் தரைப் பகுதியான வத்தலக்குண்டு பகுதிக்குத் திரும்பினா்.

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக ஒரு லட்சத்திற்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கொடைக்கானலிருந்து சென்னைக்கு செல்லும் தனியாா் வாகனங்களில் ரூ. 3 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தனா். கொடைக்கானல் மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால், 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் பழுது ஏற்பட்டு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

SCROLL FOR NEXT