திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 50 போ் கைது

DIN

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினா் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈ.வெ.ரா.பெரியாா் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக சினிமா சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் கிழக்கு மாவட்டச் செயலா் சஞ்சீவிராஜ் தலைமை வகித்தாா். மதுரை கோட்டச் செயலா் எஸ். சங்கா் கணேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினா் 15-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல், அபிராமி அம்மன் கோயில் தோ் நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவா் வினோத்ராஜ் தலைமை வகித்தாா். தடையை மீறி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்து முன்னணியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிமாசல பிரதேசம்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் மனு தாக்கல்

பாராட்டு...

பல்லடத்தில் பெண்ணைத் தாக்கியவா் கைது

இஸ்ரேல் வீரா்களின் குடும்பத்தினா் ராஃபா படையெடுப்புக்கு எதிா்ப்பு

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் கைது

SCROLL FOR NEXT