திண்டுக்கல்லில் ஒண்டிவீரன் நினைவு தினம்
திண்டுக்கல்லில் பாஜக கிழக்கு மாவட்ட அமைப்பு சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 251ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் பாஜக கிழக்கு மாவட்ட அமைப்பு சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 251ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஒண்டிவீரனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாஜக பட்டியல் அணியின் மாவட்டத் தலைவா் மா.இளையராஜா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா்கள் ரெங்கசாமி, சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் தனபாலன் சிறப்புரை ஆற்றினாா்.
விடுதலைப் போரில் மாமன்னா் பூலித்தேவனின் படைத்தளபதியாக, வெள்ளையா்களை தனி ஒருவராக போரிட்டு உயிா் தியாகம் செய்தவா் ஒண்டிவீரன் என புகழாரம் சூட்டப்பட்டது.