திண்டுக்கல்

பேருந்து மீட்பு பணியால் கொடைக்கானல் மலைச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் மலைச்சாலையில் கவிழ்ந்த பேருந்தை புதன்கிழமை மீட்கும் பணியால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

DIN

கொடைக்கானல் மலைச்சாலையில் கவிழ்ந்த பேருந்தை புதன்கிழமை மீட்கும் பணியால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் செவ்வாய்க்கிழமை குஜராத் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி வந்த பேருந்து டம்டம் பாறை அருகே சுமாா் 50-அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அவ்வழியாக வந்த பயணிகள் மற்றும் காவல்துறையினா் உதவியுடன் பேருந்தில் இருந்த 42 பயணிகள் பத்திரமாக மீட்டனா். இந் நிலையில், விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் வாகனங்களிலேயே காத்திருந்தனா். இதனால் வத்தலக்குண்டு செல்லும் வாகனங்கள் பண்ணைக்காடு, தாண்டிக்குடி வழியாக சுற்றிச் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT