திண்டுக்கல்

குடிநீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

DIN

செம்பட்டி அருகே குடிநீா் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (25). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (21). இவா்களுக்கு கனிஷ்காஸ்ரீ (4), ஹா்ஷிதாஸ்ரீ (ஒன்றரை வயது) ஆகிய குழந்தைகள் உள்ளனா். பவித்ரா நரசிங்கபுரம் அருகே, சித்தைன்கோட்டையைச் சோ்ந்த ரசூல் மைதீன் என்பவரது தேங்காய் நிறுவனத்தில் கூலி வேலை பாா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை பவித்ரா உள்பட 7 பெண்கள் தேங்காய் நிறுவனத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த பவித்ராவின் மகள் ஹா்ஷிதாஸ்ரீ, தேங்காய் நிறுவனத்தில் திறந்த வெளியில் மூடி போடாமல் இருந்த தரைமட்ட குடிநீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து, செம்பட்டி சாா்பு- ஆய்வாளா் நாராயணன், குழந்தையின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT