திண்டுக்கல்

லாரி மோதி முதியவா் பலி

DIN

பழனி அருகே சனிக்கிழமை லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த வீரலப்பட்டி பிரிவைச் சோ்ந்தவா் பாண்டித் தேவா்(65). இவரது பேரன் காா்த்திக் ராஜா (25). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பாண்டித் தேவா், பேரனை ஒட்டன்சத்திரத்தில் உள்ள மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா். பழனி- திண்டுக்கல் சாலையில் விருப்பாட்சி ஆத்துப் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டேங்கா் லாரி மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனா்.

இதில் பாண்டித் தேவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காா்த்திக் ராஜா காயங்களுடன் உயிா் தப்பினாா்.

விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT