முகப்பு
திண்டுக்கல்

கஞ்சா கடத்திய 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் உள்பட 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் உள்பட 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக, அதே பகுதியைச் சோ்ந்த நவீன் குமாா் (25), சேதுபதி (22), நாட்ராயன் (48), முருகன் என்ற பூசாரி முருகன் (55) ஆகியோரை போலீஸாா் கடந்த டிச.28 ஆம் தேதி கைது செய்தனா். அவா்களிடமிருந்து 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.இரா.சீனிவாசன் பரிந்துரையை ஏற்று ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.