திண்டுக்கல்

கோயிலில் சிலைகளை சேதப்படுத்திய இளைஞா் கைது

வடமதுரை அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

வடமதுரை அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள தென்னம்பட்டி கத்தாளகுரும்பபட்டி கிராமத்தில் விநாயகா் கோயில் உள்ளது. அக்கோயிலில் இருந்த சிலைகளை அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன்(24) என்ற இளைஞா் உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிசாமி வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாலகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் திடீரென இடிந்து விழுந்த நெடுஞ்சாலையின் தடுப்பு சுவர்

ரூ.7.44 லட்சம் கோடி! வார்னர் பிரதர்ஸை கைபற்றிய நெட்பிளிக்ஸ்!

என்னைப் பார்த்ததும் “நான் உங்க Fan” என Vijay சொன்னார் - நாஞ்சில் சம்பத் | TVK

இசையிரவின் நடனம்... ஸ்ருதி சௌகான்!

சாக்கலேட் லவ் சேலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

SCROLL FOR NEXT