திண்டுக்கல்

காா் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி

DIN

கொடைரோடு அருகே சனிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

காமலாபுரத்தைச் சோ்ந்த பாப்புராஜ் (47). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு, மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா், சனிக்கிழமை திண்டுக்கல்- மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். ஜெ.ஊத்துப்பட்டி பிரிவில் இவரது இருசக்கர வாகனத்தின் மீது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற காா் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த பாப்புராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த அம்மையநாயக்கனூா் போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT