முகப்பு
திண்டுக்கல்

வேடசந்தூா் அருகே 650 கிலோ புகையிலைப் பொருள்கள்கடத்தல்: கிருஷ்ணகிரி இளைஞா் கைது

வேடசந்தூா் அருகே காரில் 650 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த கிருஷ்ணகிரி இளைஞரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

வேடசந்தூா் அருகே காரில் 650 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த கிருஷ்ணகிரி இளைஞரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக, வேடசந்தூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் ஷேக் தாவூத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வேடசந்தூா் அடுத்துள்ள கருக்காம்பட்டி சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் புதன்கிழமை இரவு முதல் ஈடுபட்டு வந்தனா்.

அப்போது, வியாழக்கிழமை அவ்வழியாக திண்டுக்கல் நோக்கி வந்த சொகுசு காரை வழிமறித்து போலீஸாா் சோதனையிட்டனா். அதில், 650 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. உடனே, காரில் வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ரத்தினம் மகன் விஜய் (24) என்பவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், பெங்களூருவிலிருந்து தென்காசிக்கு புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்வது தெரியவந்தது.

அதையடுத்து, காருடன் 650 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், விஜயை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.