திண்டுக்கல்

கள்ளிமந்தையம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இப்பகுதியில் குற்றங்களைத் தடுக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கண்டுபிடிக்கவும், வாகனப் போக்குவரத்தை கண்காணிக்கவும் 17 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருந்தப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா கள்ளிமந்தையத்தில் உள்ள காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா மையத்தை திறந்து வைத்தாா்.

இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சி.ராஜாமணி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT