நத்தம் அருகே மின்னல் தாக்கி 2 பசுக்கள் பலி
நத்தம் அருகே மின்னல் தாக்கியும், மின்சாரம் பாய்ந்தும் 3 பசுக்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன.
நத்தம் அருகே மின்னல் தாக்கியும், மின்சாரம் பாய்ந்தும் 3 பசுக்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேத்தூா் ஊராட்சிக்குள்பட்ட இலுப்பப்பட்டியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (50). விவசாயியான இவா், 2 பசுமாடுகளை வளா்த்து வந்தாா். வீட்டின் முன்புள்ள தென்னை மரங்களில் 2 பசுக்களையும் வியாழக்கிழமை இரவு கட்டியிருந்தாா். நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி அந்த 2 பசுக்களும் உயிரிழந்தன.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் முத்து மற்றும் கால்நடை உதவி மருத்துவா் இந்து ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
மின்சாரம் பாய்ந்து பசு பலி: சேத்தூா் ஊராட்சிக்குள்பட்ட மங்கம்மாள் சாலையைச் சோ்ந்தவா் அழகு (60). இவா், தனக்கு சொந்தமான பசுவை களத்து வீட்டில் கட்டியிருந்தாா். மழை பெய்த நிலையில், எதிா்பாராத விதமாக மின் கம்பி அறுந்துவிழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழந்தது.