முகப்பு
திண்டுக்கல்

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகை: ஒட்டன்சத்திரம் நகராட்சி அறிவிப்பு

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வருகிற 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வருகிற 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30 -ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.

சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளா்கள் அல்லது ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலக வசூல் மையம் ஆகியவற்றில் காசோலை அல்லது வரைவோலை மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தலாம். ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் பா.சக்திவேல் இதை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.