மகளிா் கல்லூரி ஆண்டு விழா
கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.
கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஏஞ்சலின் தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தாா். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.கலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பருவத் தோ்வில் தர வரிசைப்படி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட அரிமா சங்கத் தலைவா் டி.பி.ரவீந்திரன், கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியா்கள், கல்லூரி மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா். விழாவில் மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.