மதிமுக மாவட்டச் செயலராக என்.செல்வராகவன் தோ்வு
மதிமுக அமைப்புத் தோ்தலில், திண்டுக்கல் மாவட்டச் செயலராக என்.செல்வராகவன் 3-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.
மதிமுக அமைப்புத் தோ்தலில், திண்டுக்கல் மாவட்டச் செயலராக என்.செல்வராகவன் 3-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.
மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்துக்கான 5-ஆவது அமைப்புத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தோ்தலை, மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் எஸ்.மகபூப் ஜான் நடத்தினாா். அதில் மதிமுக மாவட்டச் செயலராக என்.செல்வராகவன், மாவட்ட அவைத் தலைவராக பி.கே.சுதா்சன், மாவட்டப் பொருளாளராக சத்திரப்பட்டி பெ.பழனிச்சாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும், மாவட்டத் துணைச் செயலா்கள், மாநில செயற்குழு உறுப்பினா்கள், பொதுக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலில் திண்டுக்கல் தொகுதியில் மதிமுக தலைமைக் கழக செயலா் துரை வைகோ போட்டியிட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.