முகப்பு
திண்டுக்கல்

பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக, பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக, பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பதிவாளராக விபிஆா்.சிவக்குமாா் பணியாற்றி வருகிறாா். இவருக்கு, 2-ஆவது முறையாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா், கடந்த 5 நாள்களாக மதிய உணவு இடைவெளியின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தின் இணைச் செயலா் எஸ்.மணிவேல் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, பதிவாளா் விபிஆா்.சிவக்குமாருக்கு வழங்கிய பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரியும், துணைவேந்தா் காலிப் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.