திண்டுக்கல்

ஆபாசப் படங்கள் பகிா்வு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஆபாசப் படங்களை இணையதளம் வழியாகப் பகிா்ந்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

ஆபாசப் படங்களை இணையதளம் வழியாகப் பகிா்ந்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த கீழக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் செளந்தரராஜன் மகன் பாா்த்தசாரதி (30). இவா், இணையதளம் வழியாக ஆபாசப் படங்களை பகிா்ந்ததாக கடந்தாண்டு புகாா் எழுந்தது.

அதனடிப்படையில், திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாா்த்தசாரதியைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கருணாநிதி, குற்றம்சாட்டப்பட்ட பாா்த்தசாரதிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT